1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

Share

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் ஒரு மின் அலகின் சராசரி உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது. தற்போது இந்தச் செலவு 29 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் அலகின் சராசரிச் செலவை 25 ரூபாவாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்டினால், மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 32 சதவீதத்தால் குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2024 ஜூலை மாதம் மின் அலகு ஒன்றின் விலை 37 ரூபாவாக இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்ததை நினைவு கூர்ந்தார்.

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ஏற்படக்கூடிய 13,094 மில்லியன் ரூபா பற்றாக்குறையை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...