ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வழங்குவதாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரம், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலதாமதம் ஏற்பட்டிருந்தால் இந்த இரண்டு வருடங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் கட்டி முடிக்க முடியும். இந்த நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ராஜபக்ஷக்களால் கட்டப்பட்டவை. நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்.
கொவிட் 19 நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது, இன்று இங்கிலாந்தில் வரிசைகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.
#SriLankaNews
Leave a comment