diana gamage
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதிக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள்! – கோருகிறார் டயானா கமகே

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள் நாட்டை  ஆட்சிசெய்வதற்கு  வழங்குவதாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19  வைரஸ் தொற்று காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரம், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலதாமதம் ஏற்பட்டிருந்தால் இந்த இரண்டு வருடங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் கட்டி முடிக்க முடியும். இந்த நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ராஜபக்ஷக்களால் கட்டப்பட்டவை. நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்.

கொவிட் 19 நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது, இன்று இங்கிலாந்தில் வரிசைகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...