செய்திகள்
மீண்டும் சேவையை தொடங்கிய சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணத்தால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூா்,ஹைதராபாத் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.
ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்களை தரையிற கூடாது என்று இந்திய விமானநிலைய ஆணையம் தடை விதித்த நிலையில் அத்தடையை மாலை 6 மணியுடன் இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து,
புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி,மும்பை,மதுரை,கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து தரையிறங்கின .
You must be logged in to post a comment Login