corona vaccination 87687
செய்திகள்உலகம்

வெவ்வேறு தடுப்பூசிகள் – அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

Share

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன.

குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்டது.

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

முதலில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இவ் ஆய்வில் முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது.

இதே போன்ற ஆய்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றது.

அஸ்ட்ராஜெனகா மற்றும் பைஸர் ஆகிய இரு தடுப்பூசிகளை பயன்படுத்தி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...

download
உலகம்செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்: முக்கிய எரிசக்தி மையங்கள் அழிவு – குளிர்காலத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல...