image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

Share

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கும்பலைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தலிபான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல்களுக்குப் பின்னர், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கின. அதன் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் உடன்பாடின்றி முறிந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...