24
செய்திகள்இலங்கை

அனைத்து வீடுகளுக்கும் ஆயுள்வேத மருந்து!

Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுள்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தையொட்டி கொரோனாத் தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு சகல வீடுகளுக்கும் உள்ளூர் மருந்துப்பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என  அவர் கூறியுள்ளார்.

இம் மருந்துப் பெட்டியில் ஆயுள்வேத மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் நோய் தடுப்பு பானம் மற்றும் மூலிகைப்பொடி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் உள்ளடங்கிய பெட்டியானது முதலில் நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து விநியோகிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...