24
செய்திகள்இலங்கை

அனைத்து வீடுகளுக்கும் ஆயுள்வேத மருந்து!

Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுள்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தையொட்டி கொரோனாத் தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு சகல வீடுகளுக்கும் உள்ளூர் மருந்துப்பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என  அவர் கூறியுள்ளார்.

இம் மருந்துப் பெட்டியில் ஆயுள்வேத மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் நோய் தடுப்பு பானம் மற்றும் மூலிகைப்பொடி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் உள்ளடங்கிய பெட்டியானது முதலில் நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து விநியோகிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 67923813eda00
இலங்கைசெய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re-scrutiny Results) வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம்...

russia cancer vaccine news 2024 12 46d8f70b525bd47d7c40b1fc71788a65 3x2 1
செய்திகள்இலங்கை

ரஷ்ய புற்றுநோய் தடுப்பூசி குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix), புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள்...

25 68f3da4a380d9
செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸை வழிநடத்திய மஹ்மூத் அல்-முஹ்தாதி அமெரிக்காவில் கைது!

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ்  அமைப்பை வழிநடத்தியவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி...

388404105
செய்திகள்இலங்கை

கேகாலையில் பாரிய சட்டவிரோத எரிபொருள் கிடங்கு சுற்றிவளைப்பு

சட்டவிரோதமான முறையில், ரகசியமாக நடத்தப்பட்டு வந்த ஒரு எரிபொருள் கிடங்கைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், அதன்...