21 614ba1c8ad2df
செய்திகள்இலங்கை

நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை! -26ஆம் ஆண்டு நினைவேந்தல்

Share

யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமே நேற்று நினைவேந்தப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான குண்டுதாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர் .

அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21 614ba1c8c0c11

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...