Motor Vehicles
செய்திகள்இலங்கை

20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திர தரவுகள் மாயம்!!

Share

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் , 2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் வெளியிடப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே, இந்த கணினி கட்டமைப்பின் உள்ளன என அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

2009ம் ஆண்டுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை கிடையாது என்பதால், அதன் ஆவணங்கள் இல்லாது போயுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர பகுதியிலுள்ள அலுவலகத்தில் 500க்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் அடங்கிய ஆவணப் புத்தகங்கள் காணப்படுகின்றன எனவும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளன எனவும் அறிய முடிகின்றது.

கறையான் மற்றும் எலிகள் இந்த புத்தகங்களை சேதப்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இந்த நிலையில், ஆவணப் புத்தகங்களிலுள்ள தரவுகளை கணினி மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...