21 614bfbba53d25
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மீது தாக்குதல்!

Share

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார் .

அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வரும் நபரொருவர் நேற்றையதினம் சிறுவனை தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

அண்மைக்காலமாக பளையில் வசித்துவரும் நபரொருவர் அதிகமானவர்களுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பளை பொலிஸ் நிலையத்தில் அவர் மீது அதிகமான வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் (22) குறித்த நபர் சிறுவனின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஆத்திரத்தில் நியாயம் கேட்க சென்றுள்ளான். இதன்போதே குறித்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது .

இத் தாக்குதலில் சிறுவனின் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டியினூடாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 614bfbba3e074

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...