pearl one news Kanapathipillai Mahesan
செய்திகள்இலங்கை

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

Share

யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்

யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன், இறப்புகளும் அதிகரித்து செல்கின்றன.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும்.

இதேவேளை, மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப் பயிற்சி என்பவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

ஏற்கெனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவசரப்படாது அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்’ – என மாவட்டச் செயலாளர் கூறினார்.

 

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...