25 67bd5b790271f
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய விசேட பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

Share

கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்குச் சராசரியாக 23 முதல் 25 வரையிலான சைபர் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. இது முன்னரை விடப் பாரிய உயர்வு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிகரித்து வரும் இக்குற்றங்களை விசாரணை செய்வதற்குத் தற்போதைய பொலிஸ் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தொழில்நுட்பம் மற்றும் விசேட அறிவு கொண்ட அதிகாரிகளைக் கொண்ட பிரிவாக இதனை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும்.

திறமையான அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், அதேநேரம் பொதுமக்களுக்குப் பாதகமாகத் தவறிழைக்கும் அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்குவதற்குமான முறையான பொறிமுறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...