china 2
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவின் அதிரடி முடிவு! – இந்தியா காரணமா?

Share

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த சீனா தீர்மானித்துள்ளமை தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்களில் பல கோணங்களில் கதை அடிபடுகின்றது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமை குறித்தும் அதிருப்திகள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது தரப்பொன்று பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் காரணமாக Sino Soar Hybrid Technology சீன நிறுவனம் இந்த செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று செயற்றிட்டங்களையும் கைவிட்ட சீன நிறுவனம் மாலைத்தீவுகளிலுள்ள 12 தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கத்துடன் கடந்த 29 ஆம் திகதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க சீன நிறுவனம் தயாராகியிருந்தது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்ததுடன், சீன நிறுவனத்தின் இந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...

17 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பலமடங்கு...

16 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு உறுதியளித்திருந்த போதிலும், திடீரென எரிபொருள் விலைகளை அதிகரிக்க...

15 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா நீடிப்பு: அமைச்சரவை அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக விமானப் பயணங்கள்...