பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வர்ணித்து கவிதைகளை எழுதி வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வெளியிட்டு ’பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கூட பளபளக்கும் பந்தூரமே’ என வர்ணித்துள்ளார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் பளபளக்கும் பந்தூரமே’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்த நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment