சினிமா உலகைப் பொறுத்தவரைக்கும், ராஜமௌலியின் திரைப்படங்கள் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
அந்தவகையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்காக அவருக்கு 50 கோடி ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை, 20 நிமிடம் நடித்துள்ள நடிகை ஆலியா பட்டிற்கு 9 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
மேலும் இத்திரைப் படத்தில் 15 நிமிட காட்சியில் நடித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு 35 கோடி ரூபா வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பள விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து உள்ளனர்.
#CinemaNews