1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

கோஷ்டி மோதல் – நெல்லியடியில் 15 பேர் கைது!

Share

இரண்டு கோஷ்டிகளுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலுள்ள இராஜ கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு இரண்டு குழுக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளன.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகவே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...