Nigeria iii
உலகம்செய்திகள்

நைஜீரியா – சிறை தகர்ப்பு! – 240 கைதிகள் தப்பிப்பு

Share

நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் சிறையிலிருந்து 240 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  2 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் உள்ளிட்ட மொத்தம் 294 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை துரிதகதியில் நடைபெறுகிறது. கைதிகள் பற்றிய தகவலை இன்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். கைதிகளை தப்பவைத்து பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் – என அந் நாட்டு உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...