tamilni 54 scaled
இலங்கைசெய்திகள்

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

Share

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

தலங்கமவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மருத்துவ உளவியலாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுஜாதா முனசிங்க மானாபரன என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 26ஆம் திகதி ஆண் ஒருவருடன் விடுதிக்கு வந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவருடன் விடுதிக்கு வந்த ஆண் நபர் நேற்று விடுதியை விட்டு வெளியேறி இரவு மீண்டும் வந்ததாகவும் மீண்டும் வெளியே சென்றாரா என்பது நினைவில் இல்லை என விடுதி காசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் முதல் பெண்ணை காணாததால், விடுதி பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ​​படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடந்த 24 அல்லது 25 ஆம் திகதி குறித்த பெண் விடுதிக்கு வந்தபோது, ​​தன்னிடம் அடையாள அட்டை இல்லை எனவும், ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட அடையாள அட்டை இலக்கத்தை காசாளரிடம் கொடுத்ததாகவும் அது போலியானதெனவும் தெரியவந்துள்ளது.

1977 என எழுதப்பட்டிருந்தாலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது பயணப் பையில் இருந்த முகவரியொன்றை பரிசோதித்த போது அது ஹப்புத்தளை பகுதியில் உள்ள தங்கும் விடுதியொன்றிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் மருத்துவ உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படும் செய்தி அறிக்கைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விடுதியில் உள்ள சிசிடிவி கமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அது இயங்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...