baby77
செய்திகள்இலங்கை

கொரோனா பாதித்த குழந்தைக்கு காது குத்து விழா! – திருமலையில் நெகிழ்ச்சி சம்பவம்

Share

பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

baby

baby88

baby 77

 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது.

தாதியர்கள் இந்த செயற்பாடு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவலாகி வருகின்றது.

திருகோணமலையில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதியானது.

இதனால் கடந்த 9 நாள்களாக கந்தளாய் கொரோனா சிகிச்சை விடுதியில் குழந்தை  சிகிச்சை பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று 13ஆம் திகதி அக் குழந்தைக்கு பிறந்து 11 மாதம் என மருத்துவமனை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் எடுத்த தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...