baby77
செய்திகள்இலங்கை

கொரோனா பாதித்த குழந்தைக்கு காது குத்து விழா! – திருமலையில் நெகிழ்ச்சி சம்பவம்

Share

பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

baby

baby88

baby 77

 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது.

தாதியர்கள் இந்த செயற்பாடு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவலாகி வருகின்றது.

திருகோணமலையில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதியானது.

இதனால் கடந்த 9 நாள்களாக கந்தளாய் கொரோனா சிகிச்சை விடுதியில் குழந்தை  சிகிச்சை பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று 13ஆம் திகதி அக் குழந்தைக்கு பிறந்து 11 மாதம் என மருத்துவமனை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் எடுத்த தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...