நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!
இந்தியாசெய்திகள்

நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!

Share

நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி!

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார். அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிஸார் விசாரணைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவன் உயிரிழந்த நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...