இலங்கையின் சுற்றித்திரியும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சுற்றித்திரியும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்

Share

இலங்கையின் சுற்றித்திரியும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்ட கெமரூன், தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கையை சுற்றிப் பார்த்துள்ளார்.

உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடலில் குளித்தவர், வீதி ஓரங்களில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளிலும் உணவு பெற்றுக்கொண்டுள்ளார்.

கேமரூனை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என அவர் கூறியுள்ளார்.
சாதாரண பயணியாக இலங்கை வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சாதாரண பயணியாகவே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்த கெமரூன் குடும்பத்தினர் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் தனது பழைய நண்பர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரை மணி நேரம் சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...