இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11 ஆவது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சியாகவே சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியா சென்று மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்று வரும் நிலையில் புதிய ஆயுஷ் விசா நடைமுறைக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...