b1874651 9aa92aa5 52913258 ranil
செய்திகள்இலங்கை

பொருள் இறக்குமதிக்கு பணம் இல்லை! – ரணில்

Share

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் பணம் இல்லை

இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்போதேபோதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசரகால சட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களை அடக்கும் சரத்துக்களை கொண்டு வருமாக இருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தாம் தயார்.

அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க அவசரகால சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.

ஆனால், இந்த அவசரகால சட்டத்தின் கீழ் மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

நாட்டில், அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் தற்போது பணம் கிடையாது – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...