சீதாராமன் திரைப்பட கதாநாயகியாக மாறிய இலங்கைப் பெண் ஜனனி..!
இந்தியாஇலங்கைசினிமாசெய்திகள்

சீதாராமன் திரைப்பட கதாநாயகியாக மாறிய இலங்கைப் பெண் ஜனனி..!

Share

சீதாராமன் திரைப்பட கதாநாயகியாக மாறிய இலங்கைப் பெண் ஜனனி..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளராக கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஜனனி.

இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டதாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது சீதா ராமன் பட நாயகி போல புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...