mw
ஏனையவை

“தனிமையை காதலிக்கிறேன்” – தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல மொடல்!

Share

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அதிசய முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மொடல் அழகியின் திருமணம் (வயது-33) பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணத்தில் அவரது பெற்றோர். நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.

தனது இந்த திருமண முடிவு குறித்து மொடல் அழகி கிரிஸ் கேலரா தெரிவிக்கையில்,
“எனது சொந்த வாழ்க்கையில் நான் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகள் என்னை இந்த முடிவுக்கு தூண்டின. இதனால் தனிமையில் வாழ்வது சிறந்த உணர்வு என்று புரிந்துகொண்டேன். இதனை கொண்டாடும் வகையில் என்னை நானே திருமணம் செய்துள்ளேன்.” – என்றுள்ளார்.

இந்த வினோத திருமணங்கள் பலரால் அதிசயிக்கப்பட்டு பார்க்கப்பட்டாலும், வேறு பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் உலகில் அண்மைக்காலமாக இவ்வாறான வினோத திருமணங்கள் அதிகரித்துள்ளன.

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர், ஒரு ஆண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது போன்ற வினோத திருமணங்கள் அண்மையில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில், தற்போது இந்த வினோத பட்டியலில் பிரேசில் பிரபல மொடல் அழகி கிரிஸ் கேலராவும் இணைந்துள்ளார்.

mo mod

model

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...