ajith nivard cabraal 78678
செய்திகள்இலங்கை

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

Share

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்து மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் – என்றார்.

இது தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக பெரும்பாலும் நான் பெறுப்பேற்க உள்ளேன். நாடு தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியை சிறப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே இராஜாங்க அமைச்சர் பதவியை அர்ப்பணிப்பு செய்து மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளேன்.

இதேவேளை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படுமென ஊடகவியலாளர் எழுப்பியக் கேள்விக்கு “அது கட்சி தீர்மானிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரி நிதி மோசடி: நாடாளுமன்றக் குழு கடமையிலிருந்து தவறிவிட்டது – ரஜித் கீர்த்தி தென்னக்கோன் காட்டம்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி அகழ்வாய்வு: ஏழாம் நாளில் கைக்குழந்தை உட்பட 4 எலும்புக்கூடுகள் மீட்பு – மொத்த எண்ணிக்கை 250 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஏழாம் நாள் பணிகள்...

world 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மூன்றாம் நபருக்கு மாற்றம்: சி.ஐ.டி வசம் சிக்கிய இலத்திரனியல் உபகரணங்கள்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் ஒருவரின் கைகளுக்குச்...

world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எச்சரிக்கை: அதிக வெப்பத்துடன் பிற்பகலில் மழையும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஒருபுறம் கடும் வெப்பமும், மறுபுறம் பிற்பகல் வேளைகளில் மழையும் என இருவேறுபட்ட...