எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

Share

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது.

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரசாங்கத்தின் அனுசரணைடன் இம்முறை இடம்பெறவுள்ளன.

பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73 ஆவது முறையாக ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.

இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரத்தன தேரரின் வழிகாட்டல் மற்றும் அறிவுரையின் கீழ் விகாரையின் எசல பெரஹெர குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

பெரஹெராவிற்காக வருடாந்தம் வளங்களை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இம்முறையும் நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெல்லன்வில விகாரையின் புண்ணியதான நிகழ்வு மற்றும் பெரஹெர என்பன மறைந்த ஸ்ரீ சோமரதன நாயக்க தேரரினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

தேசத்திற்கு ஆசி வேண்டி தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...