எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

Share

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது.

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரசாங்கத்தின் அனுசரணைடன் இம்முறை இடம்பெறவுள்ளன.

பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73 ஆவது முறையாக ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.

இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரத்தன தேரரின் வழிகாட்டல் மற்றும் அறிவுரையின் கீழ் விகாரையின் எசல பெரஹெர குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

பெரஹெராவிற்காக வருடாந்தம் வளங்களை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இம்முறையும் நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெல்லன்வில விகாரையின் புண்ணியதான நிகழ்வு மற்றும் பெரஹெர என்பன மறைந்த ஸ்ரீ சோமரதன நாயக்க தேரரினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

தேசத்திற்கு ஆசி வேண்டி தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...