URCyFAo6BWjaqVlqPk6N 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீண்டும் தமிழரின் தாயகத்தில் குடியேற வரும் புத்தர்..!

Share

மீண்டும் தமிழரின் தாயகத்தில் குடியேற வரும் புத்தர்..!

திருகோணமலை நகரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் புத்தர் சிலை ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது திருகோணமலை நகரில் உள்ள நெல்சன் திரையரங்குக்கு முன்னால் நிறுவப்படவுள்ளது.

2ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவு கூறும் முகமாக இந்த நிர்மாணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்விற்காக தாய்லாந்தில் இருந்து குறித்த புத்தர் சிலையோடு 50 பிக்குகள் நாளை இலங்கை வரவுள்ளதாகவும் இவர்கள் தங்குவதற்காக நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கடற்படைக்கு சென்று காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக பிக்குகள் வந்து இறங்கிய பின்னர் பாதயாத்திரை மூலம் குறித்த இடத்திற்கு செல்லவுள்ளனர்.

அங்கு தாய்லாந்தில் இருந்து அவர்களால் கொண்டு வரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை வைத்து ஒரு மணித்தியாலம் பிரித் நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...