pulamaippiththan
உலகம்செய்திகள்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

Share

பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார் .

1935-ம் ஆண்டு கோவையில் பிறந்து ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1968ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இப் படத்தில் இவர் எழுதிய “நான் யார், நான் யார்” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகவுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை எனும் பாடலை எழுதியவரும் இவரே.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை புலமைப்பித்தன் நான்கு தடவைகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்லேகெலேவில் கோர விபத்து: பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர் உயிரிழப்பு!

கண்டி – திகானா பிரதான வீதியில் பல்லேகெலே இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (ஏப்ரல் 02,...

Untitled 46
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு சந்திப்பு!

தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட அதன் உயர்மட்ட...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதாரச் சீர்திருத்தங்களில் நாடாளுமன்றத்தின் பங்கு முக்கியமானது: ஐஎம்எஃப் பிரதிநிதிகளிடம் சபாநாயகர் உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுக் குழுப் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கையாக,...