f13ITI3dx4JmHwF2f9EX 1
இலங்கைசெய்திகள்

கறவை மாடுகள் திருட்டு!

Share

கறவை மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இருந்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கறவை மாடுகளை திருடி இறைச்சிக்காக படுகொலை செய்யும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதுடன், கறவை மாடுகள் திருடப்படுவதும் அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மாகாண மற்றும் மாவட்ட விவசாய அதிகாரிகள் அமைச்சரிடம் இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.

இதனால் கறவை மாடுகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் சங்கிலிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய கறவை மாடுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ள நிலையில் மாடு திருடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...