Namal Rajapakse gossip
செய்திகள்இலங்கை

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

Share

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை நிவர்த்திசெய்யும் முகமாக முதற்கட்டமாக வலய பாடசாலைகளை இணைத்து ,கல்வி மத்திய நிலையம் ஒன்றில் இணைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை ஆயிரம் பாடசாலை இணைய இணைப்பு என்ற எண்ணிக்கையில் முன்நகர்த்த தீமானித்துள்ளோம்.

மாணவர்களின் பாடசாலை நூல்களை இணையத்தில் குரல்வழி பாடமாக பதிவேற்றி செய்மதி தொழில் ஊடாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அதிவேக இணைய வசதியுடன் கூடிய கற்றல் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கல்வி அலைவரிசை ஊடாக,நேரசூசி அடிப்படையில் தொலைக்காட்சியில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கல்வி நடவடிக்கை சென்றடையும் வாய்ப்பை உருவாக்குவோம் – எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...