ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்ராலுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Share
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, வியாழக்கிழமை (06) உத்தரவு பிறப்பித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலான உண்மைகளை மறைத்ததாலும் வழக்கை முன்னெடுப்பதை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தீர்மானங்களினால் நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கீர்த்தி தென்னகோன் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் கீழ், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததில் இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ரால் தான் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு, 10.4 முதல் 10.6 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

குற்றவியல் நம்பிக்கை மீறலுக்காக தண்டனைச் சட்டத்தின் 388ஆவது பிரிவின் கீழ் கப்ரால் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கு முன்னாள் ஆளுநரும் பொறுப்பு எனவும்  குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...