ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்ராலுக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Share
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டு மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, வியாழக்கிழமை (06) உத்தரவு பிறப்பித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலான உண்மைகளை மறைத்ததாலும் வழக்கை முன்னெடுப்பதை சவால் செய்யும் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் தீர்மானங்களினால் நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கீர்த்தி தென்னகோன் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் கீழ், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை செலுத்த நடவடிக்கை எடுத்ததில் இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கப்ரால் தான் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு, 10.4 முதல் 10.6 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

குற்றவியல் நம்பிக்கை மீறலுக்காக தண்டனைச் சட்டத்தின் 388ஆவது பிரிவின் கீழ் கப்ரால் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கு முன்னாள் ஆளுநரும் பொறுப்பு எனவும்  குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...