douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் படகுகள் கண்காணிப்பு செயல்முறை

Share

நாட்டில் பயன்பாட்டில் உள்ள அனைத்து பல நாள் மீன்பிடி படகுகளுக்கும் ”படகுகள் கண்காணிப்பு செயல்முறை” (VMS – Vessel Monitoring System)  வி. எம். எஸ் செய்மதி தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த வருட இறுதிக்குள் 4,200 படகுகளுக்கு வி. எம். எஸ் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான  வினா நேரத்தில்  அரச  தரப்பு  எம்.பி திருமதி கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள பல நாள் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அவற்றில் செய்மதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்  கோகிலா குணவர்தன எம்.பி   கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நாட்டில் தற்போது 5,000 பல நாள் மீன்பிடிப் படகுகள் பாவனையில் உள்ளன. அவற்றில் 3,700 படகுகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்திட்டத்தின் மூலம் 4,200படகுகளுக்கு வி. எம். எஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளதுடன் அதில் 3,075 படகுகளுக்கு அதனைப் பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் படகுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...