tranfer 150x150 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்!

Share

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி மற்றும் யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன் ஆகியோருக்கே இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல் யாழ். மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒரே பிரதேச செயலகப் பிரிவில் 6 வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாற்றமும் மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு மாகாண மட்டத்தில் இடமாற்றமும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்களால் ஒரே தடவையில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவுள்ளது.

இவர்களின் இடத்தை நிரப்புவதற்கு வெளி மாகாணங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...