tranfer 150x150 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்!

Share

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி மற்றும் யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன் ஆகியோருக்கே இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல் யாழ். மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒரே பிரதேச செயலகப் பிரிவில் 6 வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாற்றமும் மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு மாகாண மட்டத்தில் இடமாற்றமும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்களால் ஒரே தடவையில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவுள்ளது.

இவர்களின் இடத்தை நிரப்புவதற்கு வெளி மாகாணங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...