photo 1595974482597 4b8da8879bc5
இலங்கைசெய்திகள்

விவசாய நடவடிக்கையில் கைதிகள் – விரைவில் பயிற்சி

Share

நாட்டில் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விவசாய நடவடிக்கைகளில் கைதிகளை ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கென அவர்களுக்கு சர்வதேச ஆதரவுடன் நவீன விவசாய நடைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தால் உலக நாடுகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும். அனைத்து செல்வந்த நாடுகளும் கையிருப்பில் இருக்கும் மற்றும் அதிக உணவை வாங்கும் சக்தியைக் கொண்டிருக்கும். நாம் அவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராட உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் கைதிகளின் நவீன நடைமுறைகளில் பயிர்ச்செய்கை திறன்களை மேம்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கென ஐ.நா.வுடன் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் சமூகத்தில் கைதிகள் வெற்றிகரமாக மீண்டும் ஒன்றிணைவதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வேலைத்திட்டம் நடத்தப்படுகின்றது.

சமூகத்தில் வெற்றிகரமான மீள் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, கைதிகள் தங்கள் திறமைகளை அர்த்தமுள்ள வகையில் வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சீர்திருத்த வசதிகளிலுள்ள நவீன விவசாயக் கட்டமைப்புகள் கைதிகளின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...