Yala 2Y0A7061 September 05 2020 2 Riaz Cader
இலங்கைசெய்திகள்

சுற்றுலாவிகளுக்கு யால பூங்காவில் இளைப்பாறும் இடம்!

Share

யால தேசிய பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த ஓய்விடத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் என்பனவும் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான நிகழ்ச்சி நிரல்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை 56 மில்லியன் ரூபாவாகும்.

இங்கு சுமார் 200 வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...