army 720x375 1
செய்திகள்இலங்கை

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

Share

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் அந்த
இடங்களில் பதுங்கியிருகின்றனர் என யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை பொலிஸார் மற்றும் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கொக்குவிலின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...