721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

Share

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக் கோரியிருந்தார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குழுநிலை அமர்வின்போது சட்டமூலத்தில் திருத்தங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.

சட்டமூலம் 2022 யூன் 21ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டதுடன், அப்போதைய நிதியமைச்சரினால் 2022ஆம் யூலை 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...