Photo 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

LTTE குமார் கைது!

Share

LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை அட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – செனன் பகுதியில் உள்ள தோட்ட அதிகாரியொருவரின் வீட்டில் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசி கொழும்பில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அந்நபரிடம் சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று இருந்துள்ளது. அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போதே சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல பெண்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளார். அவர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடித்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவரிடமிருந்து தங்க நகை, தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Photo 4

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...