20220319 114838
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை இந்த அரசு மீள கையில் எடுத்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழுத்தம் பிரயோகித்தார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என அரசு உறுதியளித்துள்ள நிலையில், காலாவதியான அந்த சட்டம் மீள கையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும். வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில் போராட்டக்காரர்கள்மீது எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்? எனவே, கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...