ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! – பொன்சேகா கண்டனம்

Share

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிராயுதபாணியாக – அறவழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ அறவழியில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை, தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்படவில்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைதியாக போராடியவர்கள்மீது மே 9 ஆம் திகதி வன்முறை கும்பலை ஏவிவிட்டு மஹிந்த ராஜபக்ச தாக்குதல் நடத்தினார். தற்போதைய அரசும் இதே நடைமுறையைதான் பின்பற்றுகின்றது. ” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...