Corona
இலங்கைசெய்திகள்

சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

Share

சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அதற்கிணங்க இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 30 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்..

பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சட்ட நியதிகளை பின்பற்றி முகக் கவசத்தை அணிதல்உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை 50 வீத மக்கள் மட்டுமே இதுவரை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 60 வயதிற்கு மேற்பட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் இதுவரை முதலாவது தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...