சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்!
சாராயப் போத்தலை இடுப்பில் செருகிக்கொண்டு சென்ற நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தல் குத்தி காயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் கச்சாய் பகுதியில் நேற்று நடந்துள்ளது. இதில் 32 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கச்சாய் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீடு குடிபுகுதல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, வீடு திரும்பியபோது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த மதுபானப் போத்தல் அங்கு தனக்கு வழங்கப்பட்ட து என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment