Flag of India.svg
உலகம்செய்திகள்

திரைமறைவில் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு!- மேற்குலக நாடுகள் மீது இந்தியா குற்றச்சாட்டு

Share

இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தை வகித்து வருவதால் அதற்காக உக்ரைன் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய பணம் பயன்படுத்தப்படுவதாக மேற்குலகு விமர்சனம் செய்வது நியாயமற்றது என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதோடு மேற்குலக நாடுகள் திரைமறைவில் இன்றைக்கும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது எனக் கேள்வி எழுப்பியுள்ளன.

ஈரானிடமிருந்தும் வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் கொள்வனவு செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டபோது அந் நாடுகளிடமிருந்து கொள்வனவை இந்தியா நிறுத்தியிருந்தபோதும் சீனா தொடர்ந்தும் அந் நாடுகளில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்து வந்தது. சீனா அவ்வாறிருக்கும் போது இந்தியா ஏன் எண்ணெய் கொள்வனவை வர்த்தகமாக பார்க்கக்கூடாது?

ஒரு வருடத்துக்கு முன்னர் தினமொன்றுக்கு 33 ஆயிரம் பீப்பாய் ரஷ்ய மசகு எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 77 ஆயிரம் பீப்பாய்களாக இது உயர்ந்ததோடு கடந்த மே மாதம் முதல் தினசரி 8 லட்சத்து 19 ஆயிரம் பீப்பாய்களாக தினசரி இறக்குமதி உயர்ந்துள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...