31.08 4 e1630403103918
செய்திகள்இலங்கை

ஆட்டுக் கொட்டகை இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி!!

Share

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக்கொண்டிருந்தபோது, சிமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருகில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

31.08 6 711x400 1

இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்தபோது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...