super delta
செய்திகள்இலங்கை

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

Share

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

புதிய கொரோனா திரிபு குறித்து மிக அவதானமாக கண்காணித்து வருகின்றோம் என இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபு வைரஸானது,
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் பெரும் திரிபாக இருக்கலாம். அத்துடன் இத் திரிபானது தற்போது பாவனையில் இருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு என உலக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இலங்கையில் இந்த திரிபு கண்டறியப்படவில்லை என்றாலும் இந்த திரிபுகள் உலகளவில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பில் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.

குறித்த சி .1.2 வைரஸ் திரிபானது தென்னாபிரிக்கா, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் மிக வேகமாக பரவிவரும் டெல்டா வகை திரிபைவிட இந்த சி .1.2 மிகவும் ஆபத்தானதானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...