patali champika ranawaka
செய்திகள்இலங்கை

ஒக்டோபருக்குள் நாட்டில் பஞ்சம்! – எச்சரிக்கிறார் சம்பிக்க

Share

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாவுக்கு வாங்கி 98 ரூபாவுக்கு மக்களுக்கு கொடுக்கலாம்.92 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியை 220 ரூபாவுக்கு விற்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதித்துள்ளார்.

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு இராஜினாமா செய்யாது விலை ஏற்றத்துக்கு ஏற்றவாறு அறிக்கைகள் வழங்கியவாறு உள்ளார். இந்நிலை தொடருமாக இருந்தால், வர்த்தக அமைச்சர் சீனி மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றே கருதமுடியும்.

தற்போது ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் இலாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபா வரை அவர்களால் சம்பாதிக்க முடியும் – என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...