law
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனு! – தீர்ப்பு ஜீலையில்

Share

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப் பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

” யுத்தத்தின் கடைசிப் பகுதியில் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன் றத்தில் நேற்று (17) வழங்கப்பட இருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்.” – எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...